Wednesday 30 July 2014

இனி வரும் காலம்

அரங்கேறிய இருத்தல்கள்
அலைகின்ற பெருவெளியில்
என் காலமும் ..

யுகாந்திரக் கூச்சல்களும்
வஞ்சிக்கப்பட்டவர்களின்  பெருமூச்சுகளும்
ஆசிர்வதிக்கப்படவனின் ஆசிகளும்
வழியெங்கும் நீர்த்துக் கிடக்க,

Monday 28 July 2014

குறிகளை தின்னும் சுடுகுழல்கள்...

ஆமணக்கும் நெருஞ்சியும்
பூவரசும் பனங்கூடல்களும் இயல்பிழந்து போக
அரசமரங்கள் எழில் கொள்கின்றது,

மின்குமிழ்களின் பின்னும்
தொலைபேசிக் கோபுர அடிகளிலும்
தொடரூந்து தண்டவாள இடைவெளிகளிலும்
யாருமறியாமல் நிறைந்துகிடக்கிறது
பேரிருள் சூழ்ந்த மௌனமொன்று..

Sunday 20 July 2014

ஒலித்துக்கொண்டிருக்கும் இசை....

எல்லா நேரங்களிலும் எல்லாவற்றையும் வாசிக்க முடியாது. அப்படி வாசிப்பது  என்பதும் உண்மையில் அது ஒரு ஆழமான வாசிப்பாகவும் இருக்கமுடியாது. அதுவும் கவிதைகள் என்றால், அதனை உள்ளுணர்ந்து வாசிக்கவும், அதன் அழகுணர்ச்சியில் மூழ்கிப்போகவும் அதனோடு ஒன்றிணைந்து பயணிக்கவும், தனியானதும் நேர்த்தியானதுமான ஒரு வேளை அல்லது சந்தர்ப்பம் அமையவேண்டும் என்பது என் அனுபவமாக இருக்கிறது. சிலருக்கு வேறுவிதமாகவும் இருக்ககூடும்.

Wednesday 16 July 2014

முத்தப்பா.


முத்தப்பா,  வயது எழுபது . ஊரின் கால அடையாளம்.

பெரு மழை இரவுகளிலும் நூலகத்தின் வாசலில் குந்தி இருப்பார். அல்லது கோயிலடி மடத்தில் படுத்திருப்பார். கம்பராமாயணம் முதல் சகுந்தலா காவியம் வரையும், கிளிண்டன் முதல் ஜாக்கிசான் வரையும் அவரிடம் தகவல் இருந்தது. பட்டிமன்றங்களிலும் சரி ஐயர் ஓதும் மந்திரங்களிலும் சரி பிழை பிடித்து ஒரு குரல் ஒலிக்கிறது என்றால் அது முத்தப்பாவினதாகவே இருக்கும்.


இப்படிதான் ஒரு திருமண நிகழ்வில் ஐயர் வீடு குடிபுகும் போது சொல்ல வேண்டிய  மந்திரத்தை சொல்லிவிட்டார் என்று சண்டையைக் தொடக்க..ஐயர் இங்கேயும்  இப்ப நடப்பது புது வீடு குடிபுகுதல் மாதிரித்தான் அதனால் இந்த மந்திரமும் சொல்லலாம் என்று சமாளிச்சு போனதை  அம்மா நெடுக சொல்லுவார். எந்தளவு படிச்ச மனுசன் எப்படி வாழ்ந்திருக்க வேண்டியவர் பார் என்னமாதிரி இருக்கிறார் என்று.. அவரின் அந்த இருப்பு ஊடாக  வாழ்க்கையை கற்றுக்கொடுக்க நெடுக முனைவார். அம்மா.