அகரம் உணரத்தியவர்.
அகவயம் இழந்து உறங்கிவிட்டார்.
காற்றுவழி தகவல் காதடைந்த கணத்தில்
உயிருடன் மெய்யும் ஒருகணம் நடுங்க அமைதியாகினேன்.
என்றாவது ஒருநாள் ஊரடையும் போதில் அவர் முன்னால்,
கைகட்டி எழுந்து நிற்கவேண்டும் என்ற என் மனப்படிமம் குறுகிக் கிடக்கிறது.
அடங்காப்பிள்ளை
பாடசாலையில் மட்டுமா
கோவிலில், மைதானத்தில் எங்குமே எப்போதுமே..