Sunday 18 August 2013

முடிவே தலைப்பு.........

நண்பனை பெற்றுக்கொள்ளுதல்
என்பது
குறியீடுகளால்
குறியிடமுடியாத  ஒன்றிணைவு.

காலம் கரங்களை தரும்.
கரங்களுள் காணமல் போவது
மனதின் சுரங்களை பொறுத்தது.

நண்பனை பெற்றுக்கொள்ளுதல்
என்பது
வரலாறுகளால்
வரையப்படாத அனுபவக்கீறல்.

இடங்கள் நெருக்கங்களை தரும்.
நெருக்கங்களுள் நெகிழ்ந்து போவது
நேசிப்பின் வேர்களை பொறுத்தது.

ஒரு நண்பன்
ஒரு பறவையைப்போல
ஒரு மழையைப்போல
ஒரு புலர்வைப்போல
ஒரு நல்ல வாசனையைப்போல நெருங்க வேண்டும்.

அவனின் நட்பு
மாலையாக இருக்கவேண்டும்
கழுத்தில்

நீண்ட மனவெளிகளை....
நீண்ட மௌனங்களை.........
பயமுறுத்தும் சில பொழுதுகளை........
ஒதுக்கும் சில சடங்குகளை.....
கடக்க உதவியும்,
முயன்றும் பாருங்கள் நண்பனின் கரம் பற்றி.

எப்போதும்,
நல்ல நண்பனை பெற்றுக்கொள்பவன்
நல்ல நண்பனாக இருப்பவனே.

நானும் நீயும் ....................!!!!!!!!!!


3 comments:

  1. அவனின் நட்பு
    மாலையாக இருக்கவேண்டும்
    கழுத்தில்
    ////
    பிணமாக இருக்கும் போது கூட... :)

    நல்ல வரிகள்

    ReplyDelete
  2. // எப்போதும் நல்ல நண்பனை பெற்றுக்கொள்பவன், நல்ல நண்பனாக இருப்பவனே...! //

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete