Tuesday 24 July 2012

ஆதலால் கண்ணே.............

இடைவெளிகள் நிரப்ப 
படையலாகின்ற வரிகள் இவை !
நடை பயிலும் பொன்மயிலே _இந்த 
கடைவிரிப்புக்கொரு பதில் கொடு !!

கலைகின்ற போதில் 
உதிர்கின்ற பாக்கள் இவை 
கலைமானே -இங்கு 
கொஞ்சம் கவனி 

தூண்டியதுன் விழிகள் தான் _எனை 
வாட்டியதும் உன்விழிகள் தான் 
காட்டியதுன் மொழிகள் தான் _ஆசை 
ஊட்டியதும் உன் மொழிகள்தான் 
அலைவித்ததுன் அசைவுகள்தான் _உயிர் 
கலைவித்ததுமுன் அசைவுகள்தான்

சித்தத்துள் நிதம் 
சித்துக்கள் செய்யும் 
சித்திரப்பாவையே_இந்த 
கத்திப்பார்வை நிறுத்து. 
கருத்துள் காதல் 
குருத்துக்களை  உ(க)ருவாக்கிய, 
திருமகளே _இங்கு 
கொஞ்சம் திரும்பு.

வேண்டலில்லையாதலால்_எதுவும் 
கிடைத்தலில்லை,
தயக்கம் கொள்வதால் _என்றும் 
வெற்றி கொள்வதுமில்லை,
இதுவொன்றும் ஒருவழிப்பாதையில்லை. 
ஆதலால் கண்ணே,
விலங்குடைத்து 
திருவாய் மொழிகள் பகர் .


நன்றி 
தினக்குரல் 2007மார்கழி 09    





No comments:

Post a Comment