நாவீரமாய்,
விலக்கவோ
இழக்கவோ முடியவில்லை
நினைவுகளை .............
கள்,கள்ளகசிப்பு ௬ட தந்ததில்லை
வெடித்தெழும் போதை _உன்
விழி மடிக்கையில்
விழுதுப்பாலாய்
ஒட்டிவிட்டது
வெண்சிரிப்பு _இனி
அழுது முடியுமோவென்
பிழைப்பு
தயாராக,
ஊர்வலம் பிந்துகிறது .
அட நான் இன்னும்
சாகவில்லையே ............!
வத்தாக்கிணற்றடியில்
முத்தாதகொவ்வை பளபளப்பு,
பாவற்காய் மினுமினுப்பு,
என்னவோ செய்யுது,
சரம் தூக்கி நடப்பது
றோட்டில் நாயை
துரத்தி ஓடி மகிழ்வது _என்
மட்டுமிருந்த எனை
தாடி சொறிந்து வானம்
பார்க்க வைத்த கொடுமை
காத்தடிக்க நீவர
சைக்கிள் கடையிலிருந்த
எனக்கல்லவா வேர்த்தது ?
எப்பவோ எப்படியோ பார்த்த
உன்னறையில் விளக்கெரிந்தால்
கல்லெறி வேண்டும் பக்கத்துவீட்டான்
செய்த பழிதான் என்ன ?
சைக்கிள் கடையிலிருந்த
எனக்கல்லவா வேர்த்தது ?
எப்பவோ எப்படியோ பார்த்த
கால்முடிகள் ,
இப்பவும் அப்படியே
நிறைந்திருக்கின்றன .......
உன்னறையில் விளக்கெரிந்தால்
கல்லெறி வேண்டும் பக்கத்துவீட்டான்
செய்த பழிதான் என்ன ?
ஐயருக்கு சில்லறை
வைரவருக்கு வடை
எனக்கு நீ
கோவிலில் வேறென்ன ?
திரும்பி பார்த்த நீ
விரும்பி பார்க்கவில்லை
திரும்பி பார்த்ததே
கரும்பாய் இனிக்க தவறவில்லை!
எல்லோருக்கும் எல்லாமும்
கிடைத்திருந்தால்
எனக்கும் நீ கிடைத்திருப்பாய்
arumaiyaana siru kavithaikal. palaiya ninaivukalai konduvarukinriirkal. sirippinai adakkamudiyavillai. thodaraddum unkalin pani pani.
ReplyDeleteirandu suli na vum moonru suli na vum
இனிய வணக்கம் தம்பி..
ReplyDelete///வத்தாக்கிணற்றடியில்
முத்தாதகொவ்வை பளபளப்பு,
பாவற்காய் மினுமினுப்பு,
என்னவோ செய்யுது///
இந்தத் துளிப்பா கவர்கிறது...
அதிலும் பாகற்காய் மினுமினுப்பு..
அதிகம் பயன்படுத்தப்படாத உவமானம்...
வாழ்த்துக்கள் தம்பி...